search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலம் இடிந்தது"

    முக்கொம்பு மேலணை 9 ஷட்டர்கள் நேற்றிரவு உடைந்ததால் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. இந்த முக்கொம்பு மேலணை கடந்த 6 மாதத்திற்கு முன்பே அதன் ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளது. #mukkombudam
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு மேலணை 9 ஷட்டர்கள் நேற்றிரவு உடைந்து முழு பாலமும் தண்ணீருக்குள் விழுந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. 

    இந்த முக்கொம்பு மேலணை கடந்த 6 மாதத்திற்கு முன்பே அதன் ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பே அணையின் 8-வது மதகின் இரும்பு சங்கிலி உடைந்து தொங்கியது. மதகை திறக்க பயன்படுத்தும் இந்த சங்கிலி உடைந்ததால் மதகை திறந்து அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அதிகாரிகள் சங்கிலியை மாற்றி மதகை சீரமைத்தனர். 

    அப்போதே அனைத்து மதகுகளையும் சீரமைத்திருந்தால் இந்த ஆபத்து ஏற்பட்டிருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர். #mukkombudam
    ×